தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதையடுத்து தமிழ்நாடு கமாண்டோ பயிற்சி பள்ளி சார்பில் கோவை குறிச்சி குளத்தில் மாநகர போலீசாருக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.