சென்னை மாநகராட்சி சார்பில் மாட்டு கொட்டகைக்கு கட்டணம் வசூலிப்பதால் மாடுகளைக் கட்ட மாட்டு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ராயபுரம் மாட்டு கொட்டகை வெறிச்சோடி காணப்படுகின்றன.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.