திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வரும் 7ம் தேதி நடக்க உள்ள கும்பாபிஷேகத்திற்காக யாகசாலை அமைப்பது, பக்தர்களுக்காக கடற்கரையில் தடுப்பு அமைப்பது உள்ளிட்ட பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.