தேசிய ஊடகவியலாளர் நலச் சங்கம் சார்பில் நடந்த பத்திரிக்கையாளர் சுதந்திரம் குறித்த கருத்தரங்கில், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஜர்னலிசம் மையத்தில் ஊடகவியல் டிப்ளமோ படித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை சிறப்பு விருந்தினரான தினமலர் இணை இயக்குநர் லட்சுமிபதி வழங்கினார். உடன் இடமிருந்து தேசிய ஊடகவியலாளர் நலச் சங்க துணைத் தலைவர் வெங்கடேசன், அமைப்பு செயலர் பன்னீர் செல்வம், நியூஸ் 7 தமிழ் மூத்த ஆலோசகர் ஷ்யாம் குமார், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன், தேசிய ஊடகவியலாளர் நலச் சங்க நிறுவனர் ஜெயகிருஷ்ணன். இடம் : ஆழ்வார்பேட்டை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.