ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள இந்தியாவின் மிக அழகான மற்றும் புகழ்பெற்ற பாரம்பரிய நினைவுச் சின்னங்களில் ஒன்று ஹவா மஹால், 1799ல் கட்டப்பட்ட இதில், 953 சிறிய ஜன்னல்கள் உள்ளன. இங்கு தற்போது பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள் நடக்கின்றன.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.