சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணத் தொகையை ரூ. 10 லட்சமாக உயர்த்தி தரவேண்டும் என உறவினர்கள் உடலை வாங்க மறுத்து விருதுநகர் அரசு மருத்துவமனை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
மலப்புரத்திலிருந்து கேரள அரசு பஸ்சில் கடத்தப்பட்ட ரூ.62 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை செல்வபுரத்தை சேர்ந்த நாகராஜை கேரளா போலீசார் கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டு சாதனைகளை விளக்கும் குறும்படம் அடங்கி எல்.இ.டி. திரையில் திரையிடுவதை சென்னை மெரினா காமராஜ் சாலை உழைப்பாளர் சிலை அருகே நேரில் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது. இடம்: எழும்பூர், சென்னை
மின்வாரிய இன்ஜினியர்கள் மற்றும் அதிகாரிகள் ஊதிய உயர்வை வலியுறுத்தி சென்னை அண்ணாசாலை தலைமை மின்வாரிய அலுவலகம் நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.