சாலை விரிவாக்கத்தால் பேருந்து நிழற்குடை அகற்றப்பட்:டு அணுகு சாலை அமைக்கப்பட்டது.இதனால் சாலை நடுவே பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர். இடம்: ஜி.எஸ்.டி., சாலை, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரே.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.