கர்நாடகாவின் மைசூரு தசரா கொண்டாட்டத்தின் கடைசி நாளான அக்.,2ம் தேதி, யானைகள் அணிவகுப்பு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள யானைகளுக்கான தேர்வு நேற்று நடந்தது. அப்போது, வனத்துறையினர் மற்றும் டாக்டர்கள் யானைகளின் உடற்தகுதியை சோதனை செய்தனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.