காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து பாய்கிறது. இதனால், ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில், பவானி - காவிரி ஆறுகள் சங்கமமாகும் இடத்தில் உள்ள சங்கமேஸ்வரர் கோவிலை பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.