மதுரை பிசினஸ் கம்யூனியன் அமைப்பின் நான்காவது ஆண்டு விழாவில் பங்கேற்ற ரோட்டரி துணை ஆளுநர் மற்றும் மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் சேர்மன் நெல்லை பாலுவிற்கு மைக்கேல் கல்வி நிறுவனங்களின் சேர்மன் ஸ்டாலின் ஆரோக்கியராஜ் கேடயம் நினைவு பரிசு வழங்கினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.