விவசாயத் தோட்டத்தில் ஏராளமாக பூத்திருக்கும் ஆரஞ்சு வண்ண கேந்தி பூக்களுடன் ரம்மிய காட்சியில், பின்னால் இணைத்து பார்க்கும் கண்ணுக்கு, கம்பீரமாக தோன்றும் அண்ணாமலையார் மலை இடம்: அத்தியந்தல் ,திருவண்ணாமலை.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.