சிங்கப்பெருமாள் கோவில் ஓரகடம் நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே மேம்பாலத்தின் கீழே உள்ள காலி இடத்தில் பொதுமக்கள் சிலர் குப்பை கொட்டி எரிப்பதால் பாலத்தின் மீது செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.