சிவகங்கை அருகே இலுப்பக்குடி இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடந்த மாணவர்களுக்கான போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. ஜஸ்டின் ராபர்ட் விளக்கம் அளித்தார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.