திருவாலங்காடு ஒன்றியம் ராஜபத்மாபுரம் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி மீது தனிநபர்கள் ஏறுவதை தடுக்க வேலி அமைக்கப்பட்டது. ஆனால், ஏணியை விட்டுட்டு வேலி அமைத்துள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.