ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, பெரிய குளத்தில், மத நல்லிணக்க முகரம் பண்டிகை நடைபெற்றது. இங்கு ஒரு பழக்கம் பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற தலையில் நெருப்பை போட்டுக்கொள்வர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.