காவலர் பயிற்சி பள்ளியில் நடந்த விழாவில்அனைத்து பயிற்சிகளிலும் மாநில அளவில் முதலிடம் பெற்ற பெண் பயிற்சி காவலர் முத்து செல்விக்கு ஏ.டி.ஜி.பி., தினகரன் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார் இடம்: திருவள்ளூர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.