திருத்தணி அருகே அரசு பேருந்தின் பின்பக்க கண்ணாடி மீது கல்லுாரி மாணவர்கள் இருவர் கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்துவிட்டு தப்பியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வெயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெப்ப காற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் முகத்தையும், தலையையும் துணியால் மூடியபடி சாலையில் சென்றனர்.
மஹாராஷ்டிராவின் மும்பை-புனே அதிவிரைவு சாலையில் செங்குத்தான மலைப்பகுதி அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளை தவிர்த்து புனேவுக்கு விரைவாக செல்ல 13.3 கிமீ தூரத்துக்கு மிஸ்ஸிங் லிங் சாலை அமைக்கப்பட்டது. இதை அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் திறந்து வைத்தார்.
திருப்பூர் அடுத்த பெருமநல்லூர் உத்தமலிங்கேஸ்வரர் கோவில் சித்ரா பௌர்ணமி தேர்த்திருவிழா நடந்தது. இதில் பவளக்கொடி கும்மி கலைக்குழு அறக்கட்டளை சார்பில் கம்பத்தாட்டம் நடந்தது.