விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி விழும் பாறையில் தொன்மையான சிவலிங்க சிலைகள் இருக்கின்றன. இங்கு நடந்து வந்த மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டு இருந்த தற்போது மீண்டும் நடக்கின்றன.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.