பச்சை நிறமே, பச்சை நிறமே பயமுறுத்தும் பச்சை நிறமே.! கோவை உக்கடம் வாலாங்குளத்தின் நீர் பச்சை கலருக்கு மாறி உள்ளது. இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.