ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள ராணுவ தளத்தில், இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த ராணுவ தளவாட கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த நவீன ராணுவ உபகரணங்களை பார்வையிட்ட பார்வையாளர்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.