கங்கை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், கரையை ஒட்டியுள்ள முன்னோர்களுக்கான சடங்குகள் செய்யும் மண்டபத்தை மூழ்கடிக்கும் வேகத்தில் நீர் ஓடுகிறது. ஆனாலும் பூஜாரிகள் மண்டபத்தின் விளிம்பு சுவர்களில் உட்கார்ந்தும், நின்றும் சடங்குகளை தொடர்கின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.