அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் உள்ள கிலாவியா எரிமலை, வெடிக்க துவங்கியுள்ளது. எரிமலைகளை பார்ப்பதற்காக ஹவாய் தீவுகளுக்கு சுற்றுலா சென்றவர்கள், எரிமலை வெடித்து நெருப்பு குழம்புகள் வெளியாவதை கண்டு ரசித்தனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.