தேனி கலெக்டர் அலுவலகம் முன் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் உணவு பாத்திரத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் தலைநகர் பிரசிலீயாவில் உள்ள மருத்துவமனையில் நரம்பியல் நோயாளிகளுக்கு மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை தர சிறப்பு பயிற்சி பெற்ற நாய்கள் அனுமதிக்கப்படுகின்றன.