சென்னையில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று வானிலை சற்று இதமாக காணப்பட்டதால் ஆனந்தமாக உலா வரும் மான்கள் இடம் :கிண்டி கவர்னர் மாளிகை
'சென்னையில் சங்கீத உற்சவம்' நிகழ்ச்சியில் பிரபல வயலின் வித்வான் மைசூர் டாக்டர் மஞ்சுநாத், புல்லாங்குழல் இசைக் கலைஞர் பாம்பே ரோணு மஜூம்தார் ஆகியோரின் ஜுகல்பந்தி நடந்தது.
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.