நீலகிரி மாவட்டம், கூடலூர், ஸ்ரீமதுரை ஊராட்சி அம்பலமூலா குடியிருப்பு பகுதியில் விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகள் பிரச்சனைக்கு, நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி, மக்கள் அம்பலமூலா பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை அமைப்பு சார்பில், லடாக்கின் மிக் லா பாஸ் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 19,400 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் உயரமான சாலையில், கட்டுமான பணியாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தால் ஏரியை தூய்மைப்படுத்தும் நோக்கில், நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள களைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட படகோட்டிகள்.
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி வைகுண்டவாச பெருமாள் சீனிவாச அலங்காரத்தில் சகஸ்ரதீப ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.