வால்பாறையில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்யும் நிலையில் சோலையாறு அணை நிரம்பியுள்ளது. இந்நிலையில், அணையின் மத்திய நீர்ப்பிடிப்பு பகுதியில் தேயிலை செடிகளை தண்ணீர் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.