காசியில் ஓடும் கங்கை ஆற்றின் படித்துறைகளில் ஒன்றான, 'நமோ காட்'டில், 'கும்பிட்ட கை சிலை' உள்ளது. கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த சிலையில் பெரும்பாலான பகுதி நீரில் மூழ்கி உள்ளது. இடம்: காசி, உ.பி.,
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.