சிவபெருமானுக்கு உகந்த ஸ்ராவண மாதமான இந்த மாதம் முழுதும், வட மாநிலங்களில் உள்ள பக்தர்கள் தங்களுக்கு அருகில் உள்ள நதியில் இருந்து நீரை சுமந்து சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்வர். நர்மதா நதியில் இருந்து எடுத்த புனித நீரை சுமந்து சென்ற பெண்கள். இடம்: ஜபல்பூர், ம.பி.,
நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வாங்கும் முயற்சிக்காக மாநகராட்சி சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அதன் தடுப்புகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்து கிடக்கிறது.இடம் : திருவான்மியூர்
அடையாறு ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் தண்ணீர் கலக்கும் முகத்துவாரம் பகுதி மணல் திட்டுகளாக மாறியுள்ளது இதனால் கடலும், அடையாறு ஆறும் இணையாமல் தனித் தனியே காட்சியளிக்கிறது.இடம் : சீனிவாசபுரம்
கோவை, தலைமை தபால் அலுவலகம் ரோட்டில் உள்ள ஓய்.எம்.சி.ஏ., வில் 6 முதல் 18வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சம்மர் கேம்ப் தொடங்கியது. இதில் கூடை பந்து விளையாட்டிற்கு பயிற்சிபெற்ற சிறுவர்கள்.