தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தி வரும் ஆசிய 'சர்பிங்' சாம்பியன்ஷிப் போட்டியில், நடந்த மகளிர் ஓபன் பிரிவில், உற்சாகத்துடன் அலை சறுக்கி விளையாடிய இந்திய வீராங்கனை. மாமல்லபுரத்தைச் சேர்ந்த கமலி. இடம்: மாமல்லபுரம்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.