அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்ட 'ஹிம்கிரி' என்ற போர்க்கப்பல், இந்திய கடற்படையில் விரைவில் இணைக்கப்பட உள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை தளத்தில், இதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்ட கடற்படையினர்.
விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக விவசாயிகள் தக்காளி செடிகளிலிருந்து பறிக்கப்பட்ட பழங்கள் தரம் பிரித்து பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.இடம். உடுமலை.
குளத்தில் நின்றபடி சூரிய பூஜை! சத் பூஜையை முன்னிட்டு கோவை குறிச்சி குளத்தில் நீரில் நின்றபடி சூரியனை வழிபட்டு பிரார்த்தனையில் ஈடுபட்ட கோவை வாழ் பீஹார் மற்றும் உ.பி.,யை சேர்ந்த வட மாநிலத்தவர்கள்.