இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தையொட்டி, முதன் முறையாக அமெரிக்காவின் சியாட்டில் நகரின் முக்கிய சின்னமாக கருதப்படும், 605 அடி உயர ஸ்பேஸ் நீடில் மீது மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.