கோவை கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில் கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி உள்ளிட்டோர்.
வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை எனப்படும் சூரிய வழிபாடு பண்டிகையை கொண்டாட, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல். இடம்: பாட்னா, பீஹார்.
சென்னையில் உள்ள அறுபடை வீடு முருகன் கோவிலில் காஞ்சி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஜயம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.இடம் : பெசன்ட் நகர்
திருநெல்வேலி மாவட்டம் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழை பெய்துள்ள நிலையில் குப்பக்குறிச்சி பகுதியில் பிசான நெல் சாகுபடிக்காக டிராக்டர் மூலம் து நிலத்தை உழும் விவசாயி.