ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் பெர்லினில் உள்ள பாண்டா கார்டனில், தங்களின் முதல் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது இரட்டை பாண்டா குட்டிகள் லேனி மற்றும் லொட்டி மகிழ்ச்சியுடன் விளையாடின.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.