போக்குவரத்து நெரிசலான இடத்தில் காரில் சென்றவர், ஒரு கையில் தன் குழந்தையை வைத்துக் கொண்டு, இன்னொரு கையில் ஸ்டீரிங்கை இயக்கியபடி ஓட்டிச் சென்றார். இதை பார்த்தவர்கள் மனம் பதைபதைத்தது. இதுபோன்ற செயல்களை தவிர்த்தால் நல்லது. இடம்: காமராஜர் ரோடு, திருப்பூர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..