வட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால், கங்கை மற்றும் யமுனை நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கை யமுனை சங்கமிக்கும் இடத்தில் உள்ள ஹனுமன் கோவில் வெள்ளத்தில் மூழ்கியதால், சுற்றுச்சுவர் மீது நின்று வழிபட்ட பக்தர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.