கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், மூன்றரை ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. சமீப காலத்தில் இல்லாத அளவுக்கு ரஷ்யா கடும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டது. ஏவுகணை தாக்குதலில் தீப்பற்றி எரிந்த கட்டடத்தை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்.
கிறிஸ்துவர்கள் தங்கள் முன்னோரை நினைவு கூரும் வகையிலான கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில், தங்கள் முன்னோர் மற்றும் உறவினர்களின் கல்லறையில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய கிறிஸ்துவர்கள்.
மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், நடப்பாண்டுக்கான பிரமாண்ட சைக்கிள் நடந்தது. உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த போட்டியில் 40,327 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.