நிழற்குடை இல்லாமல் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர். அதனால், இங்கு நிழற்குடை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இடம்: மாமண்டூர், சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.