சென்னை துறைமுகத்திற்கு ட்ரெய்லர் லாரி மூலம் சரக்கு ஏற்றி வந்த லாரி சென்டர் மீடியன் மோதி சக்கரம் முறிந்ததால் கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.இடம்: சென்னை காசிமேடு.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.