ரஷ்யா நடத்தி வரும் போர் மூன்றரை ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாநகராட்சி வளாகத்தின் அடித்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள வகுப்பறையில் படிக்கும் மாணவர்கள். இடம்: பாப்ரிக், உக்ரைன்.
அன்னூர் சாலையில் நெடுஞ்சாலை துறையினர் நில எடுப்பு சம்பந்தமான பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பொது மக்களின் ஒரு பகுதியினர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு போதுமான வகுப்பறைகள் இல்லாததால் வெட்ட வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான, காலி பணியிடங்களை நிரப்பக் கோரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் முன், ஆர்பாட்டம் நடந்தினர்.