அமெரிக்க அரசின் வரி விதிப்பைக் கண்டித்து, திருப்பூரில் திமுக கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள் ஹிந்தியில் வாசகம் எழுதிய பதாகையை ஏந்தி வந்தனர். அதில் மோடிஜி, அமித்ஷாஜி திருப்பூரைக் காப்பாற்றுங்கள் என்று எழுதப்பட்டு இருந்தது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.