இந்த ரோட்டை, ஏதோ புறநகர் சந்து ரோடு என நினைத்து விட வேண்டாம். கோவை மாநகரின் மத்தியில் உள்ள ஆடீஸ் வீதிதான் இப்படி அலங்கோலமாக கிடக்கிறது. வாகன ஓட்டிகள் தினமும் நொந்து போகின்றனர். ரோடு போட அரசு ஒதுக்கும் நிதி எங்கே தான் போகிறது?
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது இதில் கபாலீஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.