திருப்பூர் கருவம்பாளையம் ராஜவாய்க்கால் வீதியில் உள்ள பார்மா கம்பெனி ஜெனரேட்டரில் தீ பிடித்து, அருகில் இருந்த பனியன் நிறுவனத்திலும் தீ பிடித்தது. ஜெனரேட்டரை பாதுகாப்பாக வெளியேற்றிய தீயணைப்பு துறையினர்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..