புதுச்சேரி அரசு கல்லூரி பேராசிரியர்கள் கூட்டுப் போராட்ட குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் இருந்து ராஜ்நிவாஸ் நோக்கி பேரணியாக சென்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.