நேபாளத்தில் உள்ள நேவார் சமூகத்தில் ஒரு சிறுமியை தேர்ந்தெடுத்து அவரை தெய்வீக சக்தி படைத்தவராக வணங்குவது வழக்கம். அந்த வழக்கத்தின்படி காத்மாண்டு நகரின் ஹனுமான் தோக்கா அரண்மனையில் நேற்று நடந்த குமாரி பூஜை விழாவில் தேர்வு செய்யப்பட்ட சிறுமி.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.