கடந்த, 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழறிஞரான ஜி.யு.போப்புக்கு, பிரிட்டன் நாட்டின் ஆக்ஸ்போர்டு மாநகரில் கல்லறை உள்ளது. பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், ஜி.யு.போப்பின் கல்லறையில் அஞ்சலி செலுத்தினார்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.