திருப்பூர், காலேஜ் ரோடு எஸ்.டி.ஏ.டி.,மைதானத்தில் தடகள சங்கம் சார்பில் நடந்த ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகள 60 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோயிலில் 54 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வளாகத்தில் பொம்மை உற்பத்தியாளர்கள் சேவை தொழில்இயல் கூட்டுறவு சங்கம் சார்பில் நடந்து வரும் கொலு பொம்மை கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பொம்மைகள்.
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பெறுக வனத்துறை சார்பில் காரமடை அருகே உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையத்தில் பழங்குடியின மக்களின் நடனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடலூர் ஆல்பேட்டை தென்பண்ணையாற்று பாலத்தில் மின்விளக்கு பொருத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த லைட்டுகளை மர்ம நபர் லைட்டுகளை தூக்கி ஆற்றில் போட்டு விட்டார். அதை ஊழியர்கள் கயிறு மூலம் மேலே தூக்கினர்.