திருப்பூர், காலேஜ் ரோடு எஸ்.டி.ஏ.டி.,மைதானத்தில் தடகள சங்கம் சார்பில் நடந்த ஜூனியர் சாம்பியன்ஷிப் தடகள 60 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற மாணவர்கள்.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.