உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் கோவை வேளாண் பல்கலை இணைந்து நடத்திய அறிவியல் தமிழ் தேசியக் கருத்தரங்கில் பழந்தமிழ் இலக்கியங்களின் கலைச்சொற்களும் நவீன தொழில்நுட்பஉலகமும் கட்டுரை நூல் தொகுப்பினை அமைச்சர் சாமிநாதன் வெளியிட்டார். அருகில் (இடமிருந்து) தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைவர் பாலகிருஷ்ணன், உலக தமிழ்ச்சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, வேளாண் பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன், உதவி பேராசிரியர் செங்கோட்டையன் உள்ளிட்டோர்.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
கோவை, நவஇந்தியாவில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்ட விழாவில் பயனாளிகளுக்கு பணி நியமன ஆணையை கோவை மண்டல பி.எப். கமிஷனர் பிரசாந்த் மற்றும் மத்திய கூடுதல் பி.எப். கமிஷனர் சுவாகத ராய் உள்ளிட்டோர் வழங்கினர்.