தெற்காசிய நாடுகளை, ரகாசா என பெயரிட்டுள்ள சூறாவளி நெருங்கி வருகிறது. மிகப்பெரும் பாதிப்பை இது ஏற்படுத்தக் கூடும் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது. இதனால் விமான சேவை நிறுத்தப்பட்டதால் விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணியர். இடம்: ஹாங்காய், சீனா.
உத்தரபிரதேசத்தின் மொராதாபாதில் ஆயுதப்படை பிரிவினருக்கான துப்பாக்கி சுடுதல் மற்றும் உடற்தகுதி போட்டிகள் நடந்தன. அதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள்.
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியதால் மக்கள் படகில் பயணித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம், முத்தாரம்மன் கோவில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி விரதமிருக்கும் பக்தர்கள் மாலை அணிந்து புனித நீர் எடுத்துச்செல்ல கடற்கரையில் திரண்டனர்.