உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஓடும் யமுனை நதியை பெண் தெய்வமாக கருதி, ஆண்டிற்கு ஒரு முறை பல வண்ண புடவைகளால் அலங்கரித்து அப்பகுதி மக்கள் வழிபடுவது வழக்கம். 'சூன்ரி மனோரத் சேவா' எனப்படும் இந்த விழாவிற்காக, 200க்கும் அதிகமான புடவைகள் பயன்படுத்தப்பட்டன.
உதவும் மனது உள்ளத்தில் இருந்தால்தான் மனிதர்களுக்கு பெருமை..: விடாத மழையில் நனைந்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளியை குடை பிடித்து ரோட்டை கடந்து பாதுகாப்பான இடத்தில் விட்டு சென்ற இந்த பெண்கள்.இடம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம்.
மதுரை கலெக்டர் அலுவலகம் முன்புஅகவிலைப்படி சம்பள உயர்வை வலியுறுத்தி மறியல் செய்த தமிழ்நாடு அங்கன்வாடி கூட்டமைப்பு சங்கத்தினரை போலீசார் கைது செய்து அரசு பஸ்ஸில் அழைத்துச் சென்றனர்.